உறுப்பினர்கள் யாரும் மனசாட்சிப்படி வாக்களிக்கவில்லை. கட்டாயத்தின் பேரிலேயே வாக்களித்திருக்கின்றனர். அதிமுக உறுப்பினர்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டதாலேயே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பேரவையில் வலியுறுத்தினோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார். இது ஜனநாயக மரபுக்கும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளுக்கும் முரணானது.
இது குறித்து, தமிழக ஆளுநரிடமும் முறையிட்டிருக்கிறோம். தற்போதுள்ள அரசால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும் பேரவையில் அன்றைய தினம் நடைபெற்ற வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும்.