துபாய் : பிரபல நடிகை ஸ்ரீதேவி(54) மாரடைப்பால் துபாயில் சனிக்கிழமையன்று காலமானார். தனது உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தார். அவருடன், கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் கலந்து கொண்டார்.
பச்சை நிறத்தில் ஜொலிக்கும் உடையணிந்து ஸ்ரீதேவி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். இதில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரும் மற்றும் பலர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து பிறகு அங்கிருந்த அனைவரையும் நோக்கி கையசைத்து சென்றுள்ளார் ஸ்ரீதேவி. இது தான் ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். திருமண நிகழ்ச்சி முடிந்த நிலையில், தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்த தகவல் அவரது உறவினரும், நடிகருமான சஞ்சய் கபூரும் உறுதி செய்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி பங்கேற்ற கடைசி வீடியோ நிகழ்ச்சி