கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக கருதி இரவே விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கர்நாடக விவகாரம் தொடர்பாக விசாரணை கேட்டு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியை சந்திக்க உள்ளனர். இதனால் தலைமை நீதிபதி வீட்டிற்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.