ஸ்ரீ காத்யாயனி அம்மன் திருக்கோயிலில் டிச.4-ல் மகாகும்பாபிஷேகம்

பெரியபுராணம் அருளிய தெய்வ சேக்கிழார் பெருமான் அவதரித்த குன்றத்தூரில் திருமண வரம் அருளும் ஸ்ரீ காத்யாயனி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமணத் தடையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் தடையை நீக்கி திருமண வரம் அருளும் அன்னையாக வீற்றிருக்கிறார் அருள்மிகு காத்யாயனி தேவி. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகள் திருமண பிரார்த்தனை தினங்களாக உள்ளன. கருவறையில் வீற்றிருக்கும் காத்யாயனி அம்மன் சந்திர காந்தக் கல்லால் ஆன சக்தியாவாள்! பௌர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்கள் பெருமளவில் இவ்வாலயத்திற்கு வருகை தருகின்றனர். 

அஷ்டலட்சுமி கோபுர திருச்சுற்றில் அஷ்ட லட்சுமிகள் நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றனர். காத்யாயனி அம்மன் மற்றும் அஷ்டலட்சுமி ஆலயங்களுக்கு மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது. 

தொடர்புக்கு: 95511 84326.

நாள்: 4.12.2016, நேரம்: காலை 8.00- 9.30 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com