முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கேமராவுக்கு சவால்: ஒளிப்பதிவாளர் கர்ணன்

முதன் முதலில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படம் 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்' .இது வெளிவந்து 25 வருடங்கள் ஆகிறது.

News image
Updated On :28 ஜூலை 2016, 7:57 pm IST

முதன் முதலில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படம் 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்' .இது வெளிவந்து 25 வருடங்கள்  ஆகிறது. இந்தத் துறையில் நன் ஈடுபட்ட நாளில் இருந்து இதுவரை கேமரா கோணங்களில் பல புதுமைகளை  செய்திருக்கிறேன்.  சில அதிசய நிகழ்ச்சிக்களும் படப்பிடிப்பின் போது  நடந்திருக்கிறது. அவைகளி ல் குறிப்பிடத்தகுந்தது "தங்க ரத்தினம்"

மகாபலிபுரத்தில் இதன் வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி கரையோரமாக நின்று கொண்டு டூயட் பாடுவது போல ஒரு சீன  எடுக்க  வேண்டும். பொதுவாகவே கடல் அலைகள்  ஒரு பக்கமாக விரைந்து வந்து, கரையைத் தொட்டு  , மீண்டும் அதே மாதிரி திரும்பி போவதுதான் இயற்கையாக் நடந்து வருகிற பழக்கம். ஆனால் இரு புறமும் அலைகள் கூடி வந்து. கைக்கு எட்டாத  அளவுக்கு, உயரே எழுந்து வந்து மோதிக் கொள்ளுவது  ரொம்பவும் அபூர்வமான நிகழ்ச்சி. அத்தி பூத்தாற் போல என்று கூட சொல்லலாம்.

பாட்டுக்கு தகுந்த மாதிரி நட்சத்திரங்களை நிற்க வைத்து  ஷாட் எடுத்துக் கொண்டு இருந்தேன். நாயகனும் நாயகியும் நெருங்கி வந்து நின்ற போது , திடீரென்று கடல் அலைகள்  நான் சொன்னது போல் மேலே உயரே உயரே எழுந்து ஒன்றோடு ஒன்று மோதிக்  கொண்டன . எனக்கு ஒரு வியப்பு. எப்படி இது நடந்ததென்று? படப்பிடிப்பு முடிந்து , 'ரஷ்' போட்டு பார்த்தோம்.  மிகப் பிரமாதமாக இந்த் பாடல் காட்சி அமைந்திருந்தது? எப்படி இந்த ஷாட் அமைத்தீர்கள் என்று கேட்போர்கள்தான் இன்று ஜாஸ்தி. இதன் பின் எத்தனையோ படங்களுக்காக கடல் பக்கமாக சென்றிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அலைகள் அந்த மாதிரி உயரே எழுந்ததாய் பார்க்கவே முடியவில்லை. 

பேட்டி: மு.சிவாஜி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.08.81 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.