சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட நடுவங்கரை மேம்பாலம், அரும்பாக்கம், ஈசாக் கார்டன் போன்ற பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகின்றன. மேலும், சில இடங்களில் உள்ள தெரு விளக்குகள் அதிகாலை 4 மணிக்கே அணைக்கப்படுகின்றன. போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். காலை 6 மணி வரை தெருவிளக்குகள் எரியவும், எரியாமல் உள்ள விளக்குகளை சரி செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.