திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் மருந்தீஸ்வரர் நகர் எதிரே மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் குப்பை கொட்டப்பட்டும், போதிய பராமரிப்பு இல்லாமலும் இருந்தது. இதுகுறித்து தினமணி நாளிதழில் ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்தப் பூங்கா பராமரிக்கப்பட்டு சுத்தமாக உள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் இந்தப் பகுதி பொதுமக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.