சென்னை குறுங்காலீஸ்வரர் கோயில் திருக்குளத்தை சுற்றி மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. ஆகவே, பக்தர்களும், அந்தப் பகுதி மக்களும் செல்ல அவதிப்படுகின்றனர்.
மேலும், குளக்கரை பகுதியில் சமூக விரோதச் செயல்கள் அரங்கேறுகின்றன. ஆகவே, விளக்குகளை எரிய வைக்க இந்து சமய அறநிலையத் துறையும், அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?
-செ.பழனி, அண்ணா நகர் கிழக்கு.