மேடவாக்கம் வீரபத்ர நகர் 6-ஆவது தெருவில் நூற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், குழந்தைகள், பெண்கள் சாலையில் நடந்து செல்லும் போது நாய்கள் விரட்டுகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் நாய்கள் விரட்டுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முத்து பார்த்தசாரதி, மேடவாக்கம்.