வரதராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீராம் நகர் எக்ஸ்ட்டென்ஷன் 2-ஆவது பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. சேதமடைந்துள்ள சாலையால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. புதிய தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.ல.கணபதி, பழைய பெருங்களத்தூர்.