ஆவடி, காந்தி நகர், காமராஜ் நகர், ஜே.பி.எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தெல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் குழந்தைகள், பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.வைத்தியநாதன், ஆவடி.