வில்லிவாக்கம் மேட்டுத் தெருவில் ஏராளமான மாடுகள் கட்டிவைக்கப்படுகின்றன. இந்த வழியாகத்தான் வில்லிவாக்கம் பேருந்து பணிமனை, மார்கெட், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் மாடுகளை சிலர் கட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், இந்தப் பாதையை பயன்படுத்த முடியவில்லை. பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
ஹர்ஷவர்த்தன், வில்லிவாக்கம்.