திருவான்மியூரில் எஸ்-2 திரையரங்கம் நிறுத்தம், ஜெயந்தி திரையரங்கம் நிறுத்தம் ஆகிய இந்த இரு பேருந்து நிறுத்தங்களும் முக்கியமானவை. இந்தப் பகுதியில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் நிற்க வேண்டியுள்ளது. கர்ப்பிணிகளும், முதியவர்களும் அமர இடம் இல்லாததால் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த இரு இடங்களிலும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.