மீஞ்சூர் ரயில் நிலையத்தைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் அருகே உள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் தரமறுத்தால் அங்குள்ள சிலர் பயணிகளை மிரட்டுகிறார்கள். குறிப்பிட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் நபர்கள் மீது ரயில்வே போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.