அடையாறு, பெசன்ட்நகர். திருவான்மியூர் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகள் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கின்றன. இதனால் அவற்றுக்குள் இருக்கும் வயர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் வெளியே உள்ளன. பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தக் குறையை சரிசெய்து, மின் விபத்தால் உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.