சென்னை மாநகரப் போக்குவரத்து வழித்தடங்களில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் வழித்தட விவரங்கள் பலகையாலும், மின்னணுப் பலகையாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகளில் வழித்தட பெயர் பலகைகளில் எழுத்துகள் அழிந்த நிலையில் உள்ளன. மின்னணுப் பலகைகளிலும் பகல் நேரத்தில் சரியாக தெரிவதில்லை. இதனால், பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறனர். தெளிவான பெயர் பலகைகளைப் பெருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.