தாஷாமக்கான் நியூ பேரன்ஸ் சாலை பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், கழிவுநீர், குடிநீருடன் கலந்து வருகிறது. இந்தக் குடிநீரை அருந்துவதால் நோய் ஏற்படுகிறது. இந்த நீரை பயன்படுத்த முடியவில்லை. குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாய்யை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.