சென்னை திருமங்கலம், காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச்சாலையில் நடைபாதைக் கடைகள் அதிகரித்துள்ளன. இக்கடைகளுக்கு மெட்ரோ வாட்டர், கை பம்ப், மாலையில் தடையின்றி மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகளுக்குத் தேவையான வசதி செய்து தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ள இக்கடைகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசு, அண்ணா நகர் மேற்கு.