அடையாறு பணிமனை அருகே கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பணிமனைக்கு வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றமும் நோய்த் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. இங்கு கழிப்பறை வசதி செய்து தந்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.