குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையையொட்டி பல்லாவரம் நகராட்சியின் 38, 39-ஆவது வார்டுகளைக் கொண்ட நியு காலனி பகுதியுள்ளது. இங்குள்ள மக்கள் தாம்பரம் செல்ல வேண்டுமென்றால் எம்.ஐ.டி. பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாதசாரிகள் கடக்க அமைக்கப்பட்ட பாதையைக் கடந்துதான் ஜி.எஸ்.டி. சாலையின் மறுபகுதிக்குச் செல்ல வேண்டும். ஆனால் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையைக் கடப்பது பெரும் சவாலாக உள்ளது. இங்கு போக்குவரத்துக் காவலரை நியமித்துப் பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.
வி.சந்தானம், குரோம்பேட்டை.