மேற்கு சைதை தொடங்கி மேட்டுப்பாளையம், சிஐடி நகர், நந்தனம் வழியாக பாரிமுனை வரை செல்லும் தடம் எண் 18கே வழித்தடத்தில் இயங்கும் பேருந்து, பயணியரின் நெருக்கடிக்கு ஏற்ற வகையில் இல்லை. நாள்தோறும் சிறுவியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி / கல்லூரி மாணவர்கள் இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் நிலை உள்ளது. போக்குவரத்துத் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், மேற்கு சைதை.