தினமணி நாளிதழுக்கு நன்றி!

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் முதலாவது அவென்யூவில் தபால் பெட்டி காணாமல் போனது பற்றி ஆராய்ச்சிமணியில் கடிதம் வெளியாகியிருந்தது.

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் முதலாவது அவென்யூவில் தபால் பெட்டி காணாமல் போனது பற்றி ஆராய்ச்சிமணியில் கடிதம் வெளியாகியிருந்தது. தற்போது அந்த இடத்தில் தபால் பெட்டி மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கடிதமும் வெளியானது. அந்த இடத்தில் தற்போது வேகத்தடை அமைத்து வெள்ளையடித்துள்ளார்கள். செய்தியை வெளியிட்ட "தினமணி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி!

ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

கடந்த ஜூலை மாதத்தில் தினமணி ஆராய்ச்சிமணி பகுதியில் என்.எஸ்.கே. நகர் போக்குவரத்து சிக்னல் செயல்படாதது தொடர்பாக படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிக்னல் சீர் செய்யப்பட்டு இப்போது செயல்படுகிறது. செய்தி வெளியிட்ட தினமணிக்கும் அதைச் சரி செய்த போக்குவரத்து போலீஸாருக்கும் எனது நன்றி.

ராமன், சென்னை - 8.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com