ஆவடி பெருநகராட்சி 32, 33-வது வார்டு உள்பட பல்வேறு பகுதிகளில் விதிகளுக்குப் புறம்பாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய தெருக்களில் 20 அடிக்கு ஒரு வேகத்தடை வீதம் அமைக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த அகலத்துடன் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் விதிகளுக்கு புறம்பாக உள்ள வேகத்தடைகளை அகற்றவேண்டும்.
கே. கனகவேல், ஆவடி.