சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே செயல்பட்டு வந்த பேருந்து நிறுத்தம், ராயபுரம் பாலம் சீரமைப்புப் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200 மீட்டர் தாற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. பாலப் பணிகள் முடிவடைந்து இரண்டு மாதங்களாகியும்க் அந்தப் பேருந்து நிறுத்தம் பழைய இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், முதியோர், பெண்கள் பேருந்துக்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனை அருகிலேயே பேருந்து நிறுத்தம் செயல்பட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.டி. ராமகிருஷ்ணன், ஏழுகிணறு.