அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் இப்போது இருநாறு அடிகள் தள்ளி வைத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் சிரமப்பட்டு நடந்து வந்து பேருந்து ஏற வேண்டியுள்ளது. எனவே முன்பு இருந்தது போலவே பழைய இடத்திலேயே பேருந்துகள் நின்றால் மிகவும் நன்றாக இருக்கும். போக்குவரத்துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
கே.ஆர்.ரவீந்திரன், பாரிமுனை.