பூந்தமல்லி ஜேம்ஸ் நகரின் பின்பிறமுள்ள நகராட்சிச் சொந்தமான காலி இடத்தில் இருந்த கிணறு பாழடைந்துவிட்டது. இப்போது அதில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும், அங்கு கழிவுகள்- கழிவுநீர் சேர்ந்து சுகாதாரச் சீர்கேடு அடைந்துவருகிறது. இதன்காரணமாக தொற்றுநோய் பரவு அபாயம் உள்ளது. இதுதவிர, அந்தப் புகுதியில் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெரிதும் மாசடைந்து, பயன்படுத்த ஒவ்வாத நிலைக்கு உருவாகிவருகிறது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பூவை சம்பத், பூந்தமல்லி.