சென்னை, டிமலஸ் சாலை கேசவப்பிள்ளை பூங்கா அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டடத்தின் பின்புறம் கழிவுநீரும் குப்பையும் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. இதனால், இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. மேலும், கொசுத் தொல்லையும் அதிகளவில் உள்ளது. குழந்தைகள், முதியவர்களின் நலன் கருதி கழிவுநீரையும் குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.ப.பத்மநாபன், அண்ணாநகர் கிழக்கு