ஜவஹர் நகர் பிஸ்ஸட் சாலையில் இருந்து பேடன் பவுல் சாலை வரை குப்பை வீசப்படுகிறது. வர்தா புயலால் சாய்ந்த மரக் கிளைகளும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், இந்தப் பகுதியில் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.எஸ்.சுந்தரம், புதுவண்ணாரப்பேட்டை.