அடையாறில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனை நிறுத்தத்துக்கு அடுத்து மகாத்மா காந்தி சாலையில் பெசன்ட் நகர், பாரிமுனை செல்வதற்கு பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெசன்ட் நகர் வேளாங்கன்னி தேவாலயம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையின் முன் பேருந்துகள் நிற்காமல், சற்று தொலைவில் சென்று நிற்கின்றன. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.