கிழக்கு கடற்கரை சாலையில் கபாலீசுவர் நகர், ப்ளூ பீச் சாலையிலிருந்து திருவான்மியூர் பாரதியார் நகருக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனால், கல்வி நிலையங்கள், முதியோர் இல்லம், முக்கிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, போக்குவரத்தை சீர் செய்ய காவலர்களை நியமிக்கவேண்டும்.
- மு.ஸ்ரீதர், பாரதியார் நகர்.