பேருந்து தேவை...

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசிக்கும் மக்கள் பாரிமுனைக்குச் செல்வதற்கு வசதியாக காலை 8.45 மணிக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்த தடம் எண் 52 மாநகர பேருந்து, தற்போது என்ன காரணத்தினாலோ நிறுத்தப்பட்டு விட்டது.

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசிக்கும் மக்கள் பாரிமுனைக்குச் செல்வதற்கு வசதியாக காலை 8.45 மணிக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்த தடம் எண் 52 மாநகர பேருந்து, தற்போது என்ன காரணத்தினாலோ நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேரடி பேருந்து வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் சென்று, அங்கிருந்து பாரிமுனைக்கு வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ள எண் 52 பேருந்தை மறுபடியும் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எம்.முகமது ஜலால், பொழிச்சலூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com