குடிநீர் வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு...

சென்னை 108-ஆவது வட்டம் ரசாக் கார்டன் என்எஸ்கே நகர் பகுதி அருகே சாந்த பெருமாள் கோயில் தெருவுக்கு குடிநீர் வந்து 10 நாட்களுக்கு மேலாகிறது.

சென்னை 108-ஆவது வட்டம் ரசாக் கார்டன் என்எஸ்கே நகர் பகுதி அருகே சாந்த பெருமாள் கோயில் தெருவுக்கு குடிநீர் வந்து 10 நாட்களுக்கு மேலாகிறது. இந்தத் தெருவில் 20 குடும்பங்கள் வசிக்கின்றன. இதுகுறித்து சென்னை தலைமை குடிநீர் வாரியத்துக்கும் பகுதி குடிநீர் வாரியத்துக்கும் பலமுறை தொடர்பு கொண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இந்தப் பகுதி மக்கள் காலைக்கடன், சமையல், குளியல் அனைத்துக்கும் கேன் வாட்டரையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால், அன்றாடம் ரூ.300-க்கு மேல் செலவாகிறது. மேலும், பகுதி குடிநீர் வாரிய அதிகாரியிடம் நேரில் சென்று கேட்டால், ஒரு குடும்பத்துக்கு ரூ.500 வசூல் செய்து கொடுத்தால் மட்டுமே தடையற்ற குடிநீர் கிடைக்கும். உயரதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com