புதூரிலிருந்து (தடம் எண் 248) வள்ளலார் நகருக்குப் புறப்படும் இடத்தில் நிழற்குடை இருக்கைகள் அமைத்து நிழற்குடை மீது வள்ளலார் நகருக்குச் செல்லும் பேருந்து இடம் என அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். இதே போல மாங்காட்டிலிருந்து பிராட்வே செல்லும் தடம் என நிழற்குடை இருக்கைகள் அமைக்க வேண்டும். அண்ணா நகர், தி.நகர், திருவல்லிக்கேணி, மீஞ்சூர், திருவிகநகர் வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் திருவொற்றியூரில் இருந்து இயக்க வேண்டும். இதேபோல நிறுத்தப்பட்ட பேருந்துகளை பிராட்வேயிலிருந்து திருவொற்றியூருக்கு இயக்க வேண்டும்.
பாலம் திறந்ததும் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இருந்து மணலிக்கு எல்லையம்மன் கோயில் வழியாகப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
பி.கே.ஈஸ்வரன், திருவெற்றியூர்.