பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்துக்கு எதிரே உள்ள சைனா பஜார் நடைபாதை, கடை வியாபாரிகளால் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பாதசாரிகள் நடைபாதையை தவிர்த்து சாலையில் நடக்க வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சிவசங்கர், மயிலாப்பூர்.