ஆவடியில் பழைமை வாய்ந்த நூலகம் உள்ளது. இந்த நூலகத்துக்கு தினமும் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் போதிய இருக்கைகள், மேஜை வசதிகள் இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைக்க புத்தக அடுக்குகளும் இல்லை. இதனால், நூலகத்துக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். எனவே, வாசகர்களின் நலன் கருதி அடிப்படை வசதிகள் செய்துதர ஆவன செய்ய வேண்டும்.
- எஸ்.வைத்தியநாதன், ஆவடி.