கடந்த ஏப். 10 -ஆம் தேதி 'சாலைப்பள்ளம்' என்ற தலைப்பில் அண்ணா நகர் ரேஷன் கடை எதிரில் இருந்த பள்ளத்தைப்பற்றி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து அந்தப் பள்ளத்தை கான்கிரீட் போட்டு சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் ஆராய்ச்சிமணியில் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.
-செ.பழனி, அண்ணாநகர் கிழக்கு.