சென்னை ரசாக் கார்டன் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அண்ணாநகர், அரும்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வீதம் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. இதைப் பெற மாதத்தின் முதல் தேதியன்று வருவதால் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் காயத்துடன் செல்கின்றனர். உதவித் தொகையை விட மருத்துவச் செலவு கூடுதலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி பணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.