சென்னை பெருநகராட்சி, 95-ஆவது வட்டம், வி-5 திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து சிற்றுண்டி கடை நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரி சட்டவிரோதமாக அந்தக் கடையில் உள்ள கை பம்ப்பில் 24 மணி நேரமும் தண்ணீர் வரும்படி வசதி செய்து கொடுத்துள்ளார். மேலும், கடையிஸ் பாத்திரங்களை சுத்தம் செய்யும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர் பஞ்சத்தால் சென்னை சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.