கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுமா?

ஆவடி நகராட்சியின் கீழ் வரும் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டார் வலது திரையில் பருத்திப்பட்டு ஆவடி ஏரியில் கழிவுநீர் சேகரமாகி வருகிறது.

ஆவடி நகராட்சியின் கீழ் வரும் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டார் வலது திரையில் பருத்திப்பட்டு ஆவடி ஏரியில் கழிவுநீர் சேகரமாகி வருகிறது. இதனால் இந்த ஏரி நீர் பாழ்பட்டது. இதை சரிசெய்யும் விதமாக ரூ.40 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு அது முடிந்துள்ளது. ஆனால் இது இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஏரி நீர் தூய்மையாகிவிடும். சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் திருவேற்காடு ஆற்று நீரில் விடப்பட்டு கடலுக்குச் செல்லும். எனவே இந்த சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

எஸ். பழனி, அண்ணா நகர் கிழக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com