108-ஆவது வட்டம், என்.எஸ்.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிக்னல் எரிந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதனால், எம்.எம்.டி.ஏ. காலனியில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை நோக்கி வரும் வாகனங்களும், கோயம்பேட்டில் இருந்து வந்து எம்.எம்.டி.ஏ. காலனிக்கு வலது பக்கமாகத் திரும்பும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. போக்குவரத்து போலீஸாரும் இதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். எனவே, அந்தப் பகுதியில் சிக்னலை மீண்டும் எரியச் செய்வதோடு, உயரதிகாரிகள் அதிகாலையில் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.