வேண்டும் ஒருவழிப் பாதை!

ராமாபுரம், போரூர் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர் கே.கே.நகர் முனுசாமி சாலை, அசோக் பில்லர் போன்ற இடங்களை

ராமாபுரம், போரூர் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர் கே.கே.நகர் முனுசாமி சாலை, அசோக் பில்லர் போன்ற இடங்களை அடைவதற்கு அன்னை சத்யா நகர் பிரதான சாலை, பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளுவர் சாலை என்ற வழியையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பிள்ளையார் கோயில் தெருவில் பள்ளிகளும் மருத்துவமனையும் உள்ளதால், மக்களின் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகிய தெருவாக இத்தெரு உள்ளது. எனவே, சத்யா நகரில் இருந்து வாகனங்களை, பச்சையப்பன் தெரு மற்றும் கன்னியம்மன் கோயில் தெரு வழியாகத் திருப்பி திருவள்ளுவர் தெரு வழியாக முனுசாமி சாலையை அடையும் வகையில் பிள்ளையார் கோயில் தெருவை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டுகிறோம்.
அ.பட்டாபிராமன், நெசப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com