சென்னை அடையாறு இந்திரா நகருக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், பாண்டிச்சேரி, சேலம் போன்ற வெளியூர்களிலிருந்து பேருந்துகள் வருகின்றன. நீண்ட தூரத்தில் இருந்து பேருந்துகள் வருவதால் இறங்கியவுடன் பயணிகள் கழிப்பிடம் தேடிச் செல்கின்றனர். பேருந்து நிலையம் அருகிலேயே நம்ம டாய்லெட் உள்ளது. இது சரியாகப் பராமரிக்கப்படாததால் பயன்பாடற்ற நிலையில் அது உள்ளது. இதை சீரமைத்துக் கொடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.