ஆவடி-அண்ணா சதுக்கம் வழித்தடத்தில் தடம் எண் 40ஏ பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் இந்தப் பேருந்து பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 27எச் வழித்தடத்தில் பேருந்துகள் ஆவடி மற்றும் பட்டாபிராம் வரை இயக்கப்படுகின்றன. இதனால் ஆவடியிலிரிருந்து எழும்பூர், திருவல்லிக்கேணி செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் 24சி, 41டி, 47டி வழித்தடங்களில் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மாநகர போக்குவரத்துக் கழகம் 40ஏ வழித்தடத்தில் பேருந்துகளை ஆவடி மற்றும் பட்டாபிராம் என மாற்றி இயக்கவேண்டும்.
எஸ். வைத்தியநாதன், ஆவடி