முதியோர் உதவித் தொகை வழங்குவதை தனியாரிடம் கொடுத்து விட்டார்கள். மாதந்தோறும் பணம் எப்போது கொடுக்கிறார்கள் என்ற விவரம் தெரியாமல் தினசரி அங்குமிங்கும் முதியோர்கள் அலைகிறார்கள். சிலருக்கு 2, 3 மாதமாகப் பணம் வரவில்லை என அலைக்கழிக்கப்படுகிறார்கள். தபால்காரர் மூலமே வழங்கினால் பரவாயில்லை என சிலரும் அவரவர் வங்கிக் கணக்கிலே போட்டாலே போதும் என்கிறார்கள் சிலர்.ஆகவே ஜெயலலிதா அறிவித்தபடி முதியோர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி வங்கிக் கணக்கில் ரூ.1500 ஆகப் போட அரசு உத்தரவிட வேண்டும்.
பி.கே.ஈ, திருவொற்றியூர்.