சைதாப்பேட்டை பகுதியில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், சிறுவியாபாரிகள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தினசரி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், சைதை பகுதியில் மக்களின் தேவைக்கேற்ப அரசு வங்கிக் கிளைகள் இல்லை. மேலும், மக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் அரசு வங்கிகளின் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதை மேற்கு.