சாலை சீரமைக்கப்படுமா?

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -4, வட்டம் 34 -க்கு உட்பட்ட கடும்பாடி அம்மன் கோயில் தெருவில், குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு பல மாதங்களாகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -4, வட்டம் 34 -க்கு உட்பட்ட கடும்பாடி அம்மன் கோயில் தெருவில், குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு பல மாதங்களாகிறது. ஆனால், தோண்டப்பட்ட சாலை இன்றும் புதுப்பிக்கப்படவில்லை. மேலும், சாலையின் இருபுறமும் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா? 

எஸ். சங்கரலிங்கம், பல்ஜிபாளையம், மணலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com