திருவான்மியூர் சிக்னலை அடுத்த எல்.பி.சாலை ரேஷன் கடை அருகில் பயணியர் நிழற்குடை உள்ளது. அதில், பேருந்து வழித்தடங்களின் எண்கள் தவறாகப் பதிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சிமணி பகுதியில் கடிதம் வெளியாகி இருந்தது. தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வழியே வரும் பேருந்து வழித்தடங்கள் 102கே, 102சி, எம்15, 521டி ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினமணி நாளிதழுக்கும் நன்றி.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.