ஆவடி பெருநகராட்சி பகுதிகளான பட்டாபிராம், திருமுல்லைவாயிலில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக குடியிருப்புவாசிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டும், பல ஆண்டுகளாக இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. வீடுகளின் தொட்டிகளில் நிரம்பும் கழிவுநீரை அகற்றுவதிலும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. இதனால், ஒவ்வொரு முறையும் ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை செலவழித்து, தனியார் லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்ற வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.வைத்தியநாதன், ஆவடி.