வேப்பம்பட்டு ரயில் நிலை அருகே பெரும்பாள்பட்டு செல்லும் சாலை இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் சட்ட சிக்கல் உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தகுந்த இழப்பீடு வழங்கி மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பி. திருவேங்கடம், வேப்பம்பட்டு.