சென்னையை அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் 250 குடியிருப்புகள் உள்ளன. இங்கு தேங்கும் குப்பைகள், குடியிருப்பின் பின்பகுதியில் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நச்சுப்புகையினால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதைத் தடுத்து நிறுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, அனகாபுத்தூர்.